Sunday, April 27, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 58

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 58, ஸ்ரீ நாராயணீயம் 58வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam 

த³ஶகம் -58
காட்டுத் தீயிலிருந்து காப்பாற்றல், பிருந்தாவனத்தில் பருவங்கள் 

त्वयि विहरणलोले बालजालै: प्रलम्ब-
प्रमथनसविलम्बे धेनव: स्वैरचारा: ।
तृणकुतुकनिविष्टा दूरदूरं चरन्त्य:
किमपि विपिनमैषीकाख्यमीषांबभूवु: ॥१॥

த்வயி விஹரணலோலே பா₃லஜாலை: ப்ரலம்ப₃-
ப்ரமத₂நஸவிலம்பே₃ தே₄நவ: ஸ்வைரசாரா: | 
த்ருணகுதுகநிவிஷ்டா தூ₃ரதூ₃ரம் சரந்த்ய:
கிமபி விபிநமைஷீகாக்₂யமீஷாம்ப₃பூ₄வு: || 1||

1. பிரலம்பனை வதம் செய்து, ஆயர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தீர்கள். அப்போது, பசுக்கள் புல்லை மேய்ந்துகொண்டே ஐஷீகம் என்னும் காட்டை அடைந்தன.

अनधिगतनिदाघक्रौर्यवृन्दावनान्तात् 
बहिरिदमुपयाता: काननं धेनवस्ता: ।
तव विरहविषण्णा ऊष्मलग्रीष्मताप-
प्रसरविसरदम्भस्याकुला: स्तम्भमापु: ॥२॥

அநதி₄க₃தநிதா₃க₄க்ரௌர்யவ்ருந்தா₃வநாந்தாத் 
ப₃ஹிரித₃முபயாதா: காநநம் தே₄நவஸ்தா: | 
தவ விரஹவிஷண்ணா ஊஷ்மலக்₃ரீஷ்மதாப-
ப்ரஸரவிஸரத₃ம்ப₄ஸ்யாகுலா: ஸ்தம்ப₄மாபு: || 2||

2. வெப்பமற்ற பிருந்தாவனத்திலிருந்து ஐஷீகம் என்ற காட்டிற்கு வந்ததாலும், தங்களது பிரிவாலும் துன்பமடைந்த பசுக்கள், கடுமையான வெய்யிலால் கானல் நீரை நிஜ நீரென்று நினைத்து, தாகத்துடன் திகைத்து நின்றன. 

तदनु सह सहायैर्दूरमन्विष्य शौरे
गलितसरणिमुञ्जारण्यसञ्जातखेदम् ।
पशुकुलमभिवीक्ष्य क्षिप्रमानेतुमारा-
त्त्वयि गतवति ही ही सर्वतोऽग्निर्जजृम्भे ॥३॥

தத₃நு ஸஹ ஸஹாயைர்தூ₃ரமந்விஷ்ய ஶௌரே
க₃லிதஸரணிமுஞ்ஜாரண்யஸஞ்ஜாதகே₂த₃ம் | 
பஶுகுலமபி₄வீக்ஷ்ய க்ஷிப்ரமாநேதுமாரா-
த்த்வயி க₃தவதி ஹீ ஹீ ஸர்வதோ(அ)க்₃நிர்ஜஜ்ரும்பே₄ || 3||

3. சிறுவர்களுடன் பசுக்களைத் தேடிக்கொண்டு வந்த தாங்கள், வழிதப்பிய பசுக்களைப் பார்த்து, அவற்றை அழைத்துச் செல்ல அவைகளின் அருகே சென்றீர். அப்போது சுற்றிலும் தீப்பற்றி சூழ்ந்து கொண்டது.

सकलहरिति दीप्ते घोरभाङ्कारभीमे
शिखिनि विहतमार्गा अर्धदग्धा इवार्ता: ।
अहह भुवनबन्धो पाहि पाहीति सर्वे
शरणमुपगतास्त्वां तापहर्तारमेकम् ॥४॥

ஸகலஹரிதி தீ₃ப்தே கோ₄ரபா₄ங்காரபீ₄மே
ஶிகி₂நி விஹதமார்கா₃ அர்த₄த₃க்₃தா₄ இவார்தா: | 
அஹஹ பு₄வநப₃ந்தோ₄ பாஹி பாஹீதி ஸர்வே
ஶரணமுபக₃தாஸ்த்வாம் தாபஹர்தாரமேகம் || 4||

4. பயங்கரமான தீ எங்கும் சூழ்ந்ததால், சிறுவர்கள் வழி தடுமாறி அனலால் துன்பப்பட்டனர். அப்போது அவர்கள், உலகங்களைக் காப்பவரே! எங்களைக் காப்பாற்றும் என்று தங்களை சரணடைந்தனர்.

अलमलमतिभीत्या सर्वतो मीलयध्वं
दृशमिति तव वाचा मीलिताक्षेषु तेषु ।
क्व नु दवदहनोऽसौ कुत्र मुञ्जाटवी सा
सपदि ववृतिरे ते हन्त भाण्डीरदेशे ॥५॥

அலமலமதிபீ₄த்யா ஸர்வதோ மீலயத்₄வம்
த்₃ருஶமிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு | 
க்வ நு த₃வத₃ஹநோ(அ)ஸௌ குத்ர முஞ்ஜாடவீ ஸா
ஸபதி₃ வவ்ருதிரே தே ஹந்த பா₄ண்டீ₃ரதே₃ஶே || 5|| 

5. ‘பயப்படாதீர்கள், எல்லாரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள்’ என்று தாங்கள் கூறினீர்கள். அவர்களும் கண்ணை மூடிக்கொண்டனர். கண்ணைத் திறந்தபோது, பாண்டீரமென்னும் ஆலமரத்தடியில் இருந்தனர். தீ எங்கு சென்றது என்று அதிசயித்தனர்.

जय जय तव माया केयमीशेति तेषां
नुतिभिरुदितहासो बद्धनानाविलास: ।
पुनरपि विपिनान्ते प्राचर: पाटलादि-
प्रसवनिकरमात्रग्राह्यघर्मानुभावे ॥६॥

ஜய ஜய தவ மாயா கேயமீஶேதி தேஷாம்
நுதிபி₄ருதி₃தஹாஸோ ப₃த்₃த₄நாநாவிலாஸ: | 
புநரபி விபிநாந்தே ப்ராசர: பாடலாதி₃-
ப்ரஸவநிகரமாத்ரக்₃ராஹ்யக₄ர்மாநுபா₄வே || 6||

6. தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தங்களைத் துதித்தனர். தாங்கள் மந்தஹாஸமாய்ப் புன்னகைத்தீர். அங்கு பூத்திருந்த பாதிரி முதலிய மலர்களால் மட்டும் வெய்யில் காலம் என்று அறியப்பட்டது. ஆனால் வெயிலின் தாபம் தெரியவில்லை. பலவிதமான அதிசயங்களைச் செய்துகொண்டு, சிறுவர்களுடன் அக்காட்டில் திரிந்து விளையாடினீர்.

त्वयि विमुखमिवोच्चैस्तापभारं वहन्तं
तव भजनवदन्त: पङ्कमुच्छोषयन्तम् ।
तव भुजवदुदञ्चद्भूरितेज:प्रवाहं
तपसमयमनैषीर्यामुनेषु स्थलेषु ॥७॥

த்வயி விமுக₂மிவோச்சைஸ்தாபபா₄ரம் வஹந்தம்
தவ ப₄ஜநவத₃ந்த: பங்கமுச்சோ₂ஷயந்தம் | 
தவ பு₄ஜவது₃த₃ஞ்சத்₃பூ₄ரிதேஜ:ப்ரவாஹம்
தபஸமயமநைஷீர்யாமுநேஷு ஸ்த₂லேஷு || 7||

7. தங்களிடத்தில் பக்தியில்லாதவன் துன்பத்தை அனுபவிப்பதுபோலும், அன்புகொண்டவர் உள்ளத்தில் உள்ள பாவச்சேறுகள் காய்வதுபோலும் , தங்கள் கைகளில் உள்ள சக்கரத்தின் ஒளியைப்போலும் இருந்த கோடைக்காலத்தை யமுனையாற்றங்கரையிலேயே கழித்தீர்கள்.

तदनु जलदजालैस्त्वद्वपुस्तुल्यभाभि-
र्विकसदमलविद्युत्पीतवासोविलासै: ।
सकलभुवनभाजां हर्षदां वर्षवेलां
क्षितिधरकुहरेषु स्वैरवासी व्यनैषी: ॥८॥

தத₃நு ஜலத₃ஜாலைஸ்த்வத்₃வபுஸ்துல்யபா₄பி₄-
ர்விகஸத₃மலவித்₃யுத்பீதவாஸோவிலாஸை: | 
ஸகலபு₄வநபா₄ஜாம் ஹர்ஷதா₃ம் வர்ஷவேலாம்
க்ஷிதித₄ரகுஹரேஷு ஸ்வைரவாஸீ வ்யநைஷீ: || 8||

8. தங்கள் திருமேனியின் நிறத்துக்கோப்பான மேகங்கள் வானில் நிறைந்தது. தங்கள் பீதாம்பரத்தைப்போல மின்னல்கள் பிரகாசித்தன. எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மழைக்காலம் வந்தது. மழைக்காலத்தை மலைக்குகைகளில் கழித்தீர்கள்.

कुहरतलनिविष्टं त्वां गरिष्ठं गिरीन्द्र:
शिखिकुलनवकेकाकाकुभि: स्तोत्रकारी ।
स्फुटकुटजकदम्बस्तोमपुष्पाञ्जलिं च
प्रविदधदनुभेजे देव गोवर्धनोऽसौ ॥९॥

குஹரதலநிவிஷ்டம் த்வாம் க₃ரிஷ்ட₂ம் கி₃ரீந்த்₃ர:
ஶிகி₂குலநவகேகாகாகுபி₄: ஸ்தோத்ரகாரீ | 
ஸ்பு₂டகுடஜகத₃ம்ப₃ஸ்தோமபுஷ்பாஞ்ஜலிம் ச
ப்ரவித₃த₄த₃நுபே₄ஜே தே₃வ கோ₃வர்த₄நோ(அ)ஸௌ || 9||

9. கோவர்த்தன மலையரசன், குகையில் இருக்கும் தங்களை, அழகிய மயில்களின் அகவல் கொண்டு வரவேற்றான். மரமல்லிகையும், நீபபுஷ்பங்களும் பூச்சொரிய தங்களை வரவேற்றுத் தொழுதான்.

अथ शरदमुपेतां तां भवद्भक्तचेतो-
विमलसलिलपूरां मानयन् काननेषु ।
तृणममलवनान्ते चारु सञ्चारयन् गा:
पवनपुरपते त्वं देहि मे देहसौख्यम् ॥१०॥

அத₂ ஶரத₃முபேதாம் தாம் ப₄வத்₃ப₄க்தசேதோ-
விமலஸலிலபூராம் மாநயந் காநநேஷு |
த்ருணமமலவநாந்தே சாரு ஸஞ்சாரயந் கா₃:
பவநபுரபதே த்வம் தே₃ஹி மே தே₃ஹஸௌக்₂யம் || 10||


10. தங்கள் பக்தர்களின் உள்ளங்களைப்போலத் தெளிந்த நீருள்ள ஓடைகள், சரத்காலத்தை அறிவித்தன. பசுக்களை நல்ல புற்களை மேயச்செய்து மகிழ்ந்து திரிந்தீர். குருவாயூரப்பா! தாங்கள் எனக்கு உடல் ஆரோக்கியத்தை அளித்துக் காக்க வேண்டும். 

No comments:

Post a Comment