Sunday, June 8, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 100, ஸ்ரீ நாராயணீயம் 100வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -100
கேசாதிபாத வர்ணனை

பட்டத்ரி இந்த அத்தியாயத்தை எழுதியபோது அவர் கண் முன்னால் குருவாயூரப்பனைப் பார்த்தபடி விவரிக்கிறார். ஸ்ரீ நாராயணீயம் "நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மகிழ்ச்சி" ஆகியவற்றை அளிக்கிறது. 


अग्रे पश्यामि तेजो निबिडतरकलायावलीलोभनीयं
पीयूषाप्लावितोऽहं तदनु तदुदरे दिव्यकैशोरवेषम् ।
तारुण्यारम्भरम्यं परमसुखरसास्वादरोमाञ्चिताङ्गै-
रावीतं नारदाद्यैर्विलसदुपनिषत्सुन्दरीमण्डलैश्च ॥१॥

அக்₃ரே பஶ்யாமி தேஜோ நிபி₃ட₃தரகலாயாவலீலோப₄நீயம்
பீயூஷாப்லாவிதோ(அ)ஹம் தத₃நு தது₃த₃ரே தி₃வ்யகைஶோரவேஷம் |
தாருண்யாரம்ப₄ரம்யம் பரமஸுக₂ரஸாஸ்வாத₃ரோமாஞ்சிதாங்கை₃-
ராவீதம் நாரதா₃த்₃யைர்விலஸது₃பநிஷத்ஸுந்த₃ரீமண்ட₃லைஶ்ச || 1||

1. காயாம்பூக் கொத்துபோல் அழகிய நீலநிற ஒளியை நான் எதிரில் காண்கின்றேன். அதனால் அம்ருத மழையால் நனைந்தவனாய் உணர்கின்றேன். அந்த ஒளியின் நடுவே அழகிய தெய்வீக பாலனின் உருவில், வாலிபத்தினால் மிக்க வசீகரமாய் இருக்கின்ற ஒரு வடிவத்தைப் பார்க்கின்றேன். பேரின்பப் பரவசத்தால் மெய்சிலிர்த்து நிற்கும் நாரதர் முதலியவர்களாலும், அழகிய பெண்களாக உருவம் கொண்டு நிற்கும் உபநிஷத்துக்களாலும் சூழப்பட்டு இருக்கும் தங்களை நான் நேரில் காண்கின்றேன்.

नीलाभं कुञ्चिताग्रं घनममलतरं संयतं चारुभङ्ग्या
रत्नोत्तंसाभिरामं वलयितमुदयच्चन्द्रकै: पिञ्छजालै: ।
मन्दारस्रङ्निवीतं तव पृथुकबरीभारमालोकयेऽहं
स्निग्धश्वेतोर्ध्वपुण्ड्रामपि च सुललितां फालबालेन्दुवीथीम् ॥२||

நீலாப₄ம் குஞ்சிதாக்₃ரம் க₄நமமலதரம் ஸம்யதம் சாருப₄ங்க்₃யா
ரத்நோத்தம்ஸாபி₄ராமம் வலயிதமுத₃யச்சந்த்₃ரகை: பிஞ்ச₂ஜாலை: |
மந்தா₃ரஸ்ரங்நிவீதம் தவ ப்ருது₂கப₃ரீபா₄ரமாலோகயே(அ)ஹம்
ஸ்நிக்₃த₄ஶ்வேதோர்த்₄வபுண்ட்₃ராமபி ச ஸுலலிதாம் பா₂லபா₃லேந்து₃வீதீ₂ம் || 2 ||

2. உமது தலைமுடி கருத்த நிறத்துடன், சுருண்டு, நெருக்கமாகவும், தூய்மையாகவும் விளங்குகின்றது. அழகான முறையில் கட்டப்பட்டிருக்கும் கொண்டையுடன் விளங்குகின்றது. ரத்தினங்களாலும், கண்கள் கொண்ட மயில் தோகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, மந்தார புஷ்ப மாலை சுற்றப்பட்டிருக்கும் உமது கேசங்களைக் காண்கின்றேன். வெண்மையான, மேல்நோக்கி இடப்பட்ட அழகிய திலகத்தோடு கூடிய, பிறை நிலாவினைப் போன்ற, மனதிற்கு ரம்மியமான தங்கள் நெற்றியை நான் காண்கின்றேன்.

हृद्यं पूर्णानुकम्पार्णवमृदुलहरीचञ्चलभ्रूविलासै-
रानीलस्निग्धपक्ष्मावलिपरिलसितं नेत्रयुग्मं विभो ते ।
सान्द्रच्छायं विशालारुणकमलदलाकारमामुग्धतारं
कारुण्यालोकलीलाशिशिरितभुवनं क्षिप्यतां मय्यनाथे ॥३॥

ஹ்ருத்₃யம் பூர்ணாநுகம்பார்ணவம்ருது₃லஹரீசஞ்சலப்₄ரூவிலாஸை-
ராநீலஸ்நிக்₃த₄பக்ஷ்மாவலிபரிலஸிதம் நேத்ரயுக்₃மம் விபோ₄ தே |
ஸாந்த்₃ரச்சா₂யம் விஶாலாருணகமலத₃லாகாரமாமுக்₃த₄தாரம்
காருண்யாலோகலீலாஶிஶிரிதபு₄வநம் க்ஷிப்யதாம் மய்யநாதே₂ || 3||

3. உமது கண்கள், கடலின் அலைகளைப் போல் அசைகின்ற புருவங்களால் மனதைக் கவர்வதாய் இருக்கின்றது. இமை மயிர்கள் கருத்து அழகாய் விளங்குகின்றது. நீண்ட சிவந்த தாமரை மலரின் இதழ் போன்ற கருவிழிகளை உடைய தங்கள் பிரகாசிக்கும் இரு கண்கள், தன் கருணை நிரம்பிய பார்வையால் அகில உலகங்களையும் குளிரச் செய்கின்றது. அத்தகைய தங்கள் பார்வை ஆதரவற்ற என்மேல் விழ வேண்டும்.

उत्तुङ्गोल्लासिनासं हरिमणिमुकुरप्रोल्लसद्गण्डपाली-
व्यालोलत्कर्णपाशाञ्चितमकरमणीकुण्डलद्वन्द्वदीप्रम् ।
उन्मीलद्दन्तपङ्क्तिस्फुरदरुणतरच्छायबिम्बाधरान्त:-
प्रीतिप्रस्यन्दिमन्दस्मितमधुरतरं वक्त्रमुद्भासतां मे ॥४॥

உத்துங்கோ₃ல்லாஸிநாஸம் ஹரிமணிமுகுரப்ரோல்லஸத்₃க₃ண்ட₃பாலீ-
வ்யாலோலத்கர்ணபாஶாஞ்சிதமகரமணீகுண்ட₃லத்₃வந்த்₃வதீ₃ப்ரம் |
உந்மீலத்₃த₃ந்தபங்க்திஸ்பு₂ரத₃ருணதரச்சா₂யபி₃ம்பா₃த₄ராந்த:-
ப்ரீதிப்ரஸ்யந்தி₃மந்த₃ஸ்மிதமது₄ரதரம் வக்த்ரமுத்₃பா₄ஸதாம் மே || 4||

4. தங்கள் நாசி எடுப்பாக விளங்குகின்றது. தங்கள் காதுகளை ரத்னமயமான இரு மகர குண்டலங்கள் அலங்கரிக்கின்றது. அவை அசைந்து கன்னங்களில் பிரதிபலிப்பதால், கன்னங்கள் பச்சை மணியால் செய்யப்பட்ட கண்ணாடி போல் விளங்குகின்றது. சிவப்பான கோவைப்பழம் போல் இரு உதடுகள் பிரகாசிக்கின்றது. புன்முறுவல் பூத்த உதடுகளின் இடையே தெரியும் அழகிய வரிசையான பற்கள் மனதைக் கவர்கின்றது. அத்தகைய இனிமையான தங்கள் திருமுகம் என் உள்ளத்தில் தெளிவாகத் தோன்ற வேண்டும்.

बाहुद्वन्द्वेन रत्नोज्ज्वलवलयभृता शोणपाणिप्रवाले-
नोपात्तां वेणुनाली प्रसृतनखमयूखाङ्गुलीसङ्गशाराम् ।
कृत्वा वक्त्रारविन्दे सुमधुरविकसद्रागमुद्भाव्यमानै:
शब्दब्रह्मामृतैस्त्वं शिशिरितभुवनै: सिञ्च मे कर्णवीथीम् ॥५॥

பா₃ஹுத்₃வந்த்₃வேந ரத்நோஜ்ஜ்வலவலயப்₄ருதா ஶோணபாணிப்ரவாலே-
நோபாத்தாம் வேணுநாலீ ப்ரஸ்ருதநக₂மயூகா₂ங்கு₃லீஸங்க₃ஶாராம் |
க்ருத்வா வக்த்ராரவிந்தே₃ ஸுமது₄ரவிகஸத்₃ராக₃முத்₃பா₄வ்யமாநை:
ஶப்₃த₃ப்₃ரஹ்மாம்ருதைஸ்த்வம் ஶிஶிரிதபு₄வநை: ஸிஞ்ச மே கர்ணவீதீ₂ம் || 5||

5. உமது இரு திருக்கரங்களை ரத்தினங்கள் இழைத்த வளையல்கள் அலங்கரிக்கின்றன. உள்ளங்கைகள் சிவந்த தளிர் போன்று காட்சி அளிக்கின்றன. ஒளி வீசும் நகங்களை உடைய விரல்களால் புல்லாங்குழலை எடுத்து, தாமரை போன்ற தங்கள் முகத்தில் வைத்து, இனிமையான நாதத்தால் உலகம் முழுவதையும் குளிரச் செய்கின்றீர்கள். அந்த நாதமாகின்ற அம்ருதத்தால் என் காதுகளை நனைக்க வேண்டும்.

उत्सर्पत्कौस्तुभश्रीततिभिररुणितं कोमलं कण्ठदेशं
वक्ष: श्रीवत्सरम्यं तरलतरसमुद्दीप्रहारप्रतानम् ।
नानावर्णप्रसूनावलिकिसलयिनीं वन्यमालां विलोल-
ल्लोलम्बां लम्बमानामुरसि तव तथा भावये रत्नमालाम् ॥६॥

உத்ஸர்பத்கௌஸ்துப₄ஶ்ரீததிபி₄ரருணிதம் கோமலம் கண்ட₂தே₃ஶம்
வக்ஷ: ஶ்ரீவத்ஸரம்யம் தரலதரஸமுத்₃தீ₃ப்ரஹாரப்ரதாநம் |
நாநாவர்ணப்ரஸூநாவலிகிஸலயிநீம் வந்யமாலாம் விலோல-
ல்லோலம்பா₃ம் லம்ப₃மாநாமுரஸி தவ ததா₂ பா₄வயே ரத்நமாலாம் || 6||

6. மேல் நோக்கி வீசும் கௌஸ்துபம் என்ற மணியின் ஒளியால் உமது கழுத்து சிவந்த நிறத்துடன் அழகாக விளங்குகின்றது. மார்பில், அசையும் முத்து மாலைகளும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும் அழகாகப் பிரகாசிக்கின்றன. வண்டுகள் ரீங்காரம் செய்யும் பல்வகையான பூக்களும், தளிர்களும் கொண்டு கட்டப்பட்ட வனமாலையும், ரத்தின மாலைகளும் அலங்கரிக்கின்றன.

अङ्गे पञ्चाङ्गरागैरतिशयविकसत्सौरभाकृष्टलोकं
लीनानेकत्रिलोकीविततिमपि कृशां बिभ्रतं मध्यवल्लीम् ।
शक्राश्मन्यस्ततप्तोज्ज्वलकनकनिभं पीतचेलं दधानं
ध्यायामो दीप्तरश्मिस्फुटमणिरशनाकिङ्किणीमण्डितं त्वां ॥७॥

அங்கே₃ பஞ்சாங்க₃ராகை₃ரதிஶயவிகஸத்ஸௌரபா₄க்ருஷ்டலோகம்
லீநாநேகத்ரிலோகீவிததிமபி க்ருஶாம் பி₃ப்₄ரதம் மத்₄யவல்லீம் |
ஶக்ராஶ்மந்யஸ்ததப்தோஜ்ஜ்வலகநகநிப₄ம் பீதசேலம் த₃தா₄நம்
த்₄யாயாமோ தீ₃ப்தரஶ்மிஸ்பு₂டமணிரஶநாகிங்கிணீமண்டி₃தம் த்வாம் || 7||

7. உமது திருமேனியில் பூசப்பட்டுள்ள ஐந்து விதமான சந்தனப் பூச்சுக்களால் மக்களை ஈர்க்கின்றீர்கள். அண்டங்கள் யாவற்றையும் உள்ளடக்கி இருந்தாலும், தங்கள் இடை கொடிபோல் மெல்லியதாக இருக்கின்றது. இந்திர நீலக்கல்லைப் போன்ற தங்கள் மேனியில், உருக்கிய தங்கம் போன்ற பீதாம்பரம் ஒளிர்கின்றது. ஒளி வீசும் ரத்தினங்கள் பதித்த ஒட்டியாணத்தாலும், சிறிய மணிகளாலான அரைஞாணாலும் அலங்கரிக்கப்பட்ட தங்களை நாங்கள் தியானம் செய்கின்றோம்.

ऊरू चारू तवोरू घनमसृणरुचौ चित्तचोरौ रमाया:
विश्वक्षोभं विशङ्क्य ध्रुवमनिशमुभौ पीतचेलावृताङ्गौ ।
आनम्राणां पुरस्तान्न्यसनधृतसमस्तार्थपालीसमुद्ग-
च्छायं जानुद्वयं च क्रमपृथुलमनोज्ञे च जङ्घे निषेवे ॥८॥

ஊரூ சாரூ தவோரூ க₄நமஸ்ருணருசௌ சித்தசோரௌ ரமாயா:
விஶ்வக்ஷோப₄ம் விஶங்க்ய த்₄ருவமநிஶமுபௌ₄ பீதசேலாவ்ருதாங்கௌ₃ |
ஆநம்ராணாம் புரஸ்தாந்ந்யஸநத்₄ருதஸமஸ்தார்த₂பாலீஸமுத்₃க₃-
ச்சா₂யம் ஜாநுத்₃வயம் ச க்ரமப்ருது₂லமநோஜ்ஞே ச ஜங்கே₄ நிஷேவே || 8||

8. உமது தொடைகள் பருத்து, திடமாக, அலைமகளின் மனம் கவர்பவையாக, மினுமினுப்பாய் இருக்கின்றன. அதன் அழகினால் உலகம் கலங்கி விடுமோவென்று பீதாம்பரத்தால் மறைக்கப்பட்டவையாய் இருக்கின்றன. முழங்கால்கள், உமது பக்தர்களுக்குத் தேவையான பொருட்களை வைக்கும் சம்புடம் போன்று இருக்கின்றன. அதற்கேற்றாற்போல் பருத்த சதைப் பற்றுடன் கணைக்கால்கள் அழகாய் விளங்குகின்றன. அவற்றை நான் தியானிக்கிறேன்.

मञ्जीरं मञ्जुनादैरिव पदभजनं श्रेय इत्यालपन्तं
पादाग्रं भ्रान्तिमज्जत्प्रणतजनमनोमन्दरोद्धारकूर्मम् ।
उत्तुङ्गाताम्रराजन्नखरहिमकरज्योत्स्नया चाऽश्रितानां
सन्तापध्वान्तहन्त्रीं ततिमनुकलये मङ्गलामङ्गुलीनाम् ॥९॥

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை₃ரிவ பத₃ப₄ஜநம் ஶ்ரேய இத்யாலபந்தம்
பாதா₃க்₃ரம் ப்₄ராந்திமஜ்ஜத்ப்ரணதஜநமநோமந்த₃ரோத்₃தா₄ரகூர்மம் |
உத்துங்கா₃தாம்ரராஜந்நக₂ரஹி மகரஜ்யோத்ஸ்நயா சா(அ)ஶ்ரிதாநாம்
ஸந்தாபத்₄வாந்தஹந்த்ரீம் ததிமநுகலயே மங்க₃லாமங்கு₃லீநாம் || 9||

9. உமது திருவடிகளை வணங்குவதே சிறந்த நன்மை பயக்கும் வழி என்று தன் சப்தங்களால் கூறுவது போன்ற கொலுசை நான் தியானிக்கிறேன். ஆசையென்னும் கடலில் மூழ்கிய பக்தர்களின் மனமாகிய மந்தர மலையைத் தூக்கிக் கரையேற்றும் ஆமையைப் போல உமது பாதத்தின் மேல்பாகம் இருக்கின்றது. சற்றே உயர்ந்து சிவந்திருக்கும் நகங்களுடன் கூடிய உமது கால்விரல்கள், நிலவொளி இருட்டைப் போக்குவது போல, உமது பக்தர்களின் துன்பங்களைப் போக்குகின்றன. அவற்றை நான் தியானிக்கிறேன்.

योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो
हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम् ॥१०॥

யோகீ₃ந்த்₃ராணாம் த்வத₃ங்கே₃ஷ்வதி₄கஸுமது₄ரம் முக்திபா₄ஜாம் நிவாஸோ
ப₄க்தாநாம் காமவர்ஷத்₃யுதருகிஸலயம் நாத₂ தே பாத₃மூலம் |
நித்யம் சித்தஸ்தி₂தம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ₄
ஹ்ருத்வா நிஶ்ஶேஷதாபாந் ப்ரதி₃ஶது பரமாநந்த₃ஸந்தோ₃ஹலக்ஷ்மீம் || 10||

10. நாதா! குருவாயூரப்பா! உமது அங்கங்களுள், உம்முடைய பாதங்களே யோகிகளுக்கு மனோகரமானதாய் விளங்குகின்றது. மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு இருப்பிடமாய் உள்ளது. பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்கும் கற்பக விருட்சத்தின் தளிர் போன்று அவை இருக்கின்றன. அவை எப்போதும் என் உள்ளத்தில் இருக்க வேண்டும். கருணைக் கடலே! கிருஷ்ணா! அந்தப் பாதங்களானது என் எல்லாத் தாபங்களையும் போக்கி, பேரின்ப வெள்ளமாகிற மோக்ஷத்தை அளிக்க வேண்டும்.

अज्ञात्वा ते महत्वं यदिह निगदितं विश्वनाथ क्षमेथा:
स्तोत्रं चैतत्सहस्रोत्तरमधिकतरं त्वत्प्रसादाय भूयात् ।
द्वेधा नारायणीयं श्रुतिषु च जनुषा स्तुत्यतावर्णनेन
स्फीतं लीलावतारैरिदमिह कुरुतामायुरारोग्यसौख्यम् ॥११॥

அஜ்ஞாத்வா தே மஹத்வம் யதி₃ஹ நிக₃தி₃தம் விஶ்வநாத₂ க்ஷமேதா₂:
ஸ்தோத்ரம் சைதத்ஸஹஸ்ரோத்தரமதி₄கதரம் த்வத்ப்ரஸாதா₃ய பூ₄யாத் |
த்₃வேதா₄ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதாவர்ணநேந
ஸ்பீ₂தம் லீலாவதாரைரித₃மிஹ குருதாமாயுராரோக்₃யஸௌக்₂யம் || 11||

11. உலகிற்கு நாயகனே! உமது மகிமையை அறியாமல் இதில் கூறியவற்றைப் பொறுத்தருள வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த ஸ்தோத்திரங்கள் உமது அருளை அளிப்பவையாக இருக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனைப் போற்றிப் பாடியிருப்பதாலும், நாராயணன் என்பவரால் எழுதப்பட்டதாலும், இந்த ஸ்தோத்திரத்திற்கு நாராயணீயம் என்று பெயர். வேதங்களில் கூறப்பட்ட உமது அவதாரங்களையும், லீலைகளையும் வர்ணிக்கின்றது. இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று நம்பூதிரி வேண்ட ஸ்ரீ குருவாயூரப்பனும் தலையை ஆட்டி அங்கீகரித்தார்.


சுபமஸ்து.
ஸ்ரீ குருவாயூரப்பா ரணம்.
ஓம் நமோ நாராயணாய.

No comments:

Post a Comment