Monday, June 2, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 94, ஸ்ரீ நாராயணீயம் 94வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -94
தத்வக்ஞான உற்பத்தி

शुद्धा निष्कामधर्मै: प्रवरगुरुगिरा तत्स्वरूपं परं ते
शुद्धं देहेन्द्रियादिव्यपगतमखिलव्याप्तमावेदयन्ते ।
नानात्वस्थौल्यकार्श्यादि तु गुणजवपुस्सङ्गतोऽध्यासितं ते
वह्नेर्दारुप्रभेदेष्विव महदणुतादीप्तताशान्ततादि ॥१॥

ஶுத்₃தா₄ நிஷ்காமத₄ர்மை: ப்ரவரகு₃ருகி₃ரா தத்ஸ்வரூபம் பரம் தே
ஶுத்₃த₄ம் தே₃ஹேந்த்₃ரியாதி₃வ்யபக₃தமகி₂லவ்யாப்தமாவேத₃யந்தே |
நாநாத்வஸ்தௌ₂ல்யகார்ஶ்யாதி₃ து கு₃ணஜவபுஸ்ஸங்க₃தோ(அ)த்₄யாஸிதம் தே
வஹ்நேர்தா₃ருப்ரபே₄தே₃ஷ்விவ மஹத₃ணுதாதீ₃ப்ததாஶாந்ததாதி₃ || 1||

1. பலனை விரும்பாமல் தர்மங்களைச் செய்பவர்கள், நல்ல குருவின் மூலம், ஐம்புலன்களில் இருந்து வேறுபட்டதும், எங்கும் வியாபித்திருப்பதுமான உம்முடைய வடிவத்தை அறிகிறார்கள். பலவகை மரக்கட்டைகளில் தொடர்பு கொண்ட அக்னி எவ்வாறு சிறியது, பெரியது எனப் பலவகையாகத் தோன்றுகிறதோ, அவ்வாறே பலவகைக் குணங்களால் செய்யப்பட்ட உடல்களின் சம்பந்தத்தால் பலவிதமாய்த் தோன்றுகின்றீர்.

आचार्याख्याधरस्थारणिसमनुमिलच्छिष्यरूपोत्तरार-
ण्यावेधोद्भासितेन स्फुटतरपरिबोधाग्निना दह्यमाने ।
कर्मालीवासनातत्कृततनुभुवनभ्रान्तिकान्तारपूरे
दाह्याभावेन विद्याशिखिनि च विरते त्वन्मयी खल्ववस्था ॥२॥

ஆசார்யாக்₂யாத₄ரஸ்தா₂ரணிஸமநுமிலச்சி₂ஷ்யரூபோத்தரார-
ண்யாவேதோ₄த்₃பா₄ஸிதேந ஸ்பு₂டதரபரிபோ₃தா₄க்₃நிநா த₃ஹ்யமாநே |
கர்மாலீவாஸநாதத்க்ருததநுபு₄வநப்₄ராந்திகாந்தாரபூரே
தா₃ஹ்யாபா₄வேந வித்₃யாஶிகி₂நி ச விரதே த்வந்மயீ க₂ல்வவஸ்தா₂ || 2||

2. குரு என்கிற அடி அரணிக்கட்டையும், சிஷ்யன் என்கிற மேல் அரணிக்கட்டையும் உரசுவதால், மிகத் தெளிவான ஞானம் என்னும் தீப்பொறி உண்டாகிறது. அந்தத் தீயால், கர்மங்களின் கூட்டம், அதனால் உண்டான இந்த உடல், உலகம் என்னும் காடுகள் எரிக்கப்படுகிறது. எரிக்கப் பொருள் இல்லையெனில் ஞானமாகிற அந்தத் தீ அமைதியாய் அடங்குகின்றது. எஞ்சியுள்ள ஓர் நிலை தங்கள் வடிவமாக இருக்கின்றது.

एवं त्वत्प्राप्तितोऽन्यो नहि खलु निखिलक्लेशहानेरुपायो
नैकान्तात्यन्तिकास्ते कृषिवदगदषाड्गुण्यषट्कर्मयोगा: ।
दुर्वैकल्यैरकल्या अपि निगमपथास्तत्फलान्यप्यवाप्ता
मत्तास्त्वां विस्मरन्त: प्रसजति पतने यान्त्यनन्तान् विषादान्॥३॥

ஏவம் த்வத்ப்ராப்திதோ(அ)ந்யோ நஹி க₂லு நிகி₂லக்லேஶஹாநேருபாயோ
நைகாந்தாத்யந்திகாஸ்தே க்ருஷிவத₃க₃த₃ஷாட்₃கு₃ண்யஷட்கர்மயோகா₃: |
து₃ர்வைகல்யைரகல்யா அபி நிக₃மபதா₂ஸ்தத்ப₂லாந்யப்யவாப்தா
மத்தாஸ்த்வாம் விஸ்மரந்த: ப்ரஸஜதி பதநே யாந்த்யநந்தாந் விஷாதா₃ந்|| 3||

3. அனைத்து துக்கங்களையும் போக்கும் ஒரே வழி உம்மை அடைவதுதான். ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்ட மருந்துகளோ, ராஜநீதியில் சொல்லப்பட்ட வழிமுறைகளோ, தர்மநூல்களில் சொல்லப்பட்ட கர்மங்களோ, வேதத்தில் கூறப்பட்ட யோகங்களோ துன்பத்தைப் போக்கி மீண்டும் வராமல் தடுக்கும் சக்தியற்றவை. மற்ற வழிகளும் கடினமானவை. ஆயினும், அந்த வழிகளைப் பின்பற்றிப் பலனை அடைந்து, அதனால் செருக்கடைந்து, தங்களை மறந்து விடுகின்றனர். வீழ்ச்சி ஏற்படும்போது அளவற்ற துன்பங்களை அடைகின்றனர்.

त्वल्लोकादन्यलोक: क्वनु भयरहितो यत् परार्धद्वयान्ते
त्वद्भीतस्सत्यलोकेऽपि न सुखवसति: पद्मभू: पद्मनाभ ।
एवं भावे त्वधर्मार्जितबहुतमसां का कथा नारकाणां
तन्मे त्वं छिन्धि बन्धं वरद् कृपणबन्धो कृपापूरसिन्धो ॥४॥

த்வல்லோகாத₃ந்யலோக: க்வநு ப₄யரஹிதோ யத் பரார்த₄த்₃வயாந்தே
த்வத்₃பீ₄தஸ்ஸத்யலோகே(அ)பி ந ஸுக₂வஸதி: பத்₃மபூ₄: பத்₃மநாப₄ |
ஏவம் பா₄வே த்வத₄ர்மார்ஜிதப₃ஹுதமஸாம் கா கதா₂ நாரகாணாம்
தந்மே த்வம் சி₂ந்தி₄ ப₃ந்த₄ம் வரத்₃ க்ருபணப₃ந்தோ₄ க்ருபாபூரஸிந்தோ₄ || 4||

4. பத்மநாபா! தங்கள் இருப்பிடமான வைகுண்டத்தைத் தவிர பயமற்ற உலகம் வேறில்லை. ஏனெனில், இரு பரார்த்தங்கள் முடிந்த பின்னும், பிரும்மன் பயத்தினால் ஸத்யலோகத்தில் சுகமாய் வாழவில்லை. இவ்வாறிருக்க, அதர்மங்களைச் செய்து நரகத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? வரதனே! துன்பமடைந்தவர்களைக் காப்பவனே! கருணைக் கடலே! எனது பந்தங்களை அறுக்க வேண்டும்.

याथार्थ्यात्त्वन्मयस्यैव हि मम न विभो वस्तुतो बन्धमोक्षौ
मायाविद्यातनुभ्यां तव तु विरचितौ स्वप्नबोधोपमौ तौ ।
बद्धे जीवद्विमुक्तिं गतवति च भिदा तावती तावदेको
भुङ्क्ते देहद्रुमस्थो विषयफलरसान्नापरो निर्व्यथात्मा ॥५॥

யாதா₂ர்த்₂யாத்த்வந்மயஸ்யைவ ஹி மம ந விபோ₄ வஸ்துதோ ப₃ந்த₄மோக்ஷௌ
மாயாவித்₃யாதநுப்₄யாம் தவ து விரசிதௌ ஸ்வப்நபோ₃தோ₄பமௌ தௌ |
ப₃த்₃தே₄ ஜீவத்₃விமுக்திம் க₃தவதி ச பி₄தா₃ தாவதீ தாவதே₃கோ
பு₄ங்க்தே தே₃ஹத்₃ருமஸ்தோ₂ விஷயப₂லரஸாந்நாபரோ நிர்வ்யதா₂த்மா || 5||

5. உண்மையில் உம்மிடத்தில் ஒன்றிவிட்டதால் எனக்கு பந்தமோ, மோக்ஷமோ கிடையாது. அவை உன் மாயையின் அம்சங்கள். கனவும், விழிப்பும் போன்றது. பந்தமுள்ளவனுக்கும், ஜீவன்முக்தனுக்கும் உள்ள வேற்றுமை அவ்விதமானதுதான். பந்தமுள்ளவன், சரீரமென்னும் மரத்தில் இருந்துகொண்டு விஷய சுகங்களாகிற பழங்களை அனுபவிக்கிறான். ஜீவன்முக்தன் அவற்றில் ஈடுபடாமல் துக்கமற்றவனாய் இருக்கிறான்.

जीवन्मुक्तत्वमेवंविधमिति वचसा किं फलं दूरदूरे
तन्नामाशुद्धबुद्धेर्न च लघु मनसश्शोधनं भक्तितोऽन्यत् ।
तन्मे विष्णो कृषीष्ठास्त्वयि कृतसकलप्रार्पणं भक्तिभारं
येन स्यां मङ्क्षु किञ्चिद् गुरुवचनमिलत्त्वत्प्रबोधस्त्वदात्मा ॥६॥

ஜீவந்முக்தத்வமேவம்வித₄மிதி வசஸா கிம் ப₂லம் தூ₃ரதூ₃ரே
தந்நாமாஶுத்₃த₄பு₃த்₃தே₄ர்ந ச லகு₄ மநஸஶ்ஶோத₄நம் ப₄க்திதோ(அ)ந்யத் |
தந்மே விஷ்ணோ க்ருʼஷீஷ்டா₂ஸ்த்வயி க்ருதஸகலப்ரார்பணம் ப₄க்திபா₄ரம்
யேந ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித்₃ கு₃ருவசநமிலத்த்வத்ப்ரபோ₃த₄ஸ்த்வதா₃த்மா || 6||

6. ஜீவன்முக்தனின் நிலை இதுதான் என்று கூறுவதால் என்ன பயன்? மனத்தூய்மை இல்லாதவனுக்கு அந்நிலை கிடைக்காது. மனதை சுலபமாகத் தூய்மைப்படுத்துவது பக்தி ஒன்றே. விஷ்ணுவே! உம்மிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும் திடமான பக்தியை அளிக்க வேண்டும். அந்தப் பக்தியால் குருவின் உபதேசம் பெற்று, தத்வக்ஞானத்தை அடைந்து, விரைவில் உம்மிடமே ஒன்றிவிடுவேன்.

शब्द्ब्रह्मण्यपीह प्रयतितमनसस्त्वां न जानन्ति केचित्
कष्टं वन्ध्यश्रमास्ते चिरतरमिह गां बिभ्रते निष्प्रसूतिम् ।
यस्यां विश्वाभिरामास्सकलमलहरा दिव्यलीलावतारा:
सच्चित्सान्द्रं च रूपं तव न निगदितं तां न वाचं भ्रियासम् ॥७॥

ஶப்₃த்₃ப்₃ரஹ்மண்யபீஹ ப்ரயதிதமநஸஸ்த்வாம் ந ஜாநந்தி கேசித்
கஷ்டம் வந்த்₄யஶ்ரமாஸ்தே சிரதரமிஹ கா₃ம் பி₃ப்₄ரதே நிஷ்ப்ரஸூதிம் |
யஸ்யாம் விஶ்வாபி₄ராமாஸ்ஸகலமலஹரா தி₃வ்யலீலாவதாரா:
ஸச்சித்ஸாந்த்₃ரம் ச ரூபம் தவ ந நிக₃தி₃தம் தாம் ந வாசம் ப்₄ரியாஸம் || 7||

7. சிலர் வேதத்தைக் கற்று அதிலேயே மூழ்கிய மனம் உடையவர்களாய் இருந்தாலும் உம்மை அறிவதில்லை. அவர்கள் கன்று போடாத மலட்டுப் பசுவைப் போல், வீண் முயற்சி செய்பவர்கள். கிருஷ்ணா! மனதைக் கவர்ந்து பாபங்களைப் போக்கும் உமது லீலைகளையும், சச்சிதானந்த ஸ்வரூபமான தங்களையும், தங்கள் அவதாரங்களையும் பற்றிக் கூறாத அந்த வார்த்தைகளின் பின்னால் நான் செல்லாமல் இருக்க வேண்டும்.

यो यावान् यादृशो वा त्वमिति किमपि नैवावगच्छामि भूम्-
न्नेवञ्चानन्यभावस्त्वदनुभजनमेवाद्रिये चैद्यवैरिन् ।
त्वल्लिङ्गानां त्वदङ्घ्रिप्रियजनसदसां दर्शनस्पर्शनादि-
र्भूयान्मे त्वत्प्रपूजानतिनुतिगुणकर्मानुकीर्त्यादरोऽपि ॥८॥

யோ யாவாந் யாத்₃ருஶோ வா த்வமிதி கிமபி நைவாவக₃ச்சா₂மி பூ₄ம்-
ந்நேவஞ்சாநந்யபா₄வஸ்த்வத₃நுப₄ஜநமேவாத்₃ரியே சைத்₃யவைரிந் |
த்வல்லிங்கா₃நாம் த்வத₃ங்க்₄ரிப்ரியஜநஸத₃ஸாம் த₃ர்ஶநஸ்பர்ஶநாதி₃-
ர்பூ₄யாந்மே த்வத்ப்ரபூஜாநதிநுதிகு₃ணகர்மாநுகீர்த்யாத₃ரோ(அ)பி || 8||

8. பரிபூரணனே! உம்முடைய் வடிவம் என்ன? மகிமை எவ்வளவு? என்பதை நான் அறியேன். ஆனால் வேறொன்றையும் விரும்பாமல் உம்மையே பஜிக்கிறேன். சிசுபாலனின் எதிரியான கிருஷ்ணா! உம்முடைய அழகிய ரூபங்களையும், உம்முடைய பாதங்களையே அண்டியிருக்கும் பக்தர்களையும் தரிசித்து, அவர்களோடு சேர வேண்டும். உம்மைப் போற்றிப் பாடி, நமஸ்கரித்து, உமது குணங்களையும் திருவிளையாடல்களையும் பேசிக் கொண்டு, உம்மிடத்தில் பற்றுள்ளவனாக நான் இருக்க வேண்டும்.

यद्यल्लभ्येत तत्तत्तव समुपहृतं देव दासोऽस्मि तेऽहं
त्वद्गेहोन्मार्जनाद्यं भवतु मम मुहु: कर्म निर्मायमेव ।
सूर्याग्निब्राह्मणात्मादिषु लसितचतुर्बाहुमाराधये त्वां
त्वत्प्रेमार्द्रत्वरूपो मम सततमभिष्यन्दतां भक्तियोग: ॥९॥

யத்₃யல்லப்₄யேத தத்தத்தவ ஸமுபஹ்ருதம் தே₃வ தா₃ஸோ(அ)ஸ்மி தே(அ)ஹம்
த்வத்₃கே₃ஹோந்மார்ஜநாத்₃யம் ப₄வது மம முஹு: கர்ம நிர்மாயமேவ |
ஸூர்யாக்₃நிப்₃ராஹ்மணாத்மாதி₃ஷு லஸிதசதுர்பா₃ஹுமாராத₄யே த்வாம்
த்வத்ப்ரேமார்த்₃ரத்வரூபோ மம ஸததமபி₄ஷ்யந்த₃தாம் ப₄க்தியோக₃: || 9||

9. என்னுடைய அனைத்துப் பொருட்களையும் தங்களிடமே அர்ப்பணிக்கிறேன். தங்களுக்கே அடிமையாக இருப்பேன். உம்முடைய ஆலயத்தை சுத்தம் செய்வது போன்ற தொண்டுகள் செய்வேன். சூரியன், அக்னி, பிராமணன், தன் ஹ்ருதயம், பசு ஆகியவற்றில் நான்கு கைகளுடன் விளங்கும் தங்களை ஆராதிப்பேன். அன்பினால் நனைந்த என் இதயம் இடைவிடாமல் பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

ऐक्यं ते दानहोमव्रतनियमतपस्सांख्ययोगैर्दुरापं
त्वत्सङ्गेनैव गोप्य: किल सुकृतितमा प्रापुरानन्दसान्द्रम् ।
भक्तेष्वन्येषु भूयस्स्वपि बहुमनुषे भक्तिमेव त्वमासां
तन्मे त्वद्भक्तिमेव द्रढय हर गदान् कृष्ण वातालयेश ॥१०॥

ஐக்யம் தே தா₃நஹோமவ்ரதநியமதபஸ்ஸாம்க்₂யயோகை₃ர்து₃ராபம்
த்வத்ஸங்கே₃நைவ கோ₃ப்ய: கில ஸுக்ருதிதமா ப்ராபுராநந்த₃ஸாந்த்₃ரம் |
ப₄க்தேஷ்வந்யேஷு பூ₄யஸ்ஸ்வபி ப₃ஹுமநுஷே ப₄க்திமேவ த்வமாஸாம்
தந்மே த்வத்₃ப₄க்திமேவ த்₃ரட₄ய ஹர க₃தா₃ந் க்ருஷ்ண வாதாலயேஶ || 10||

10. ஹே குருவாயூரப்பா! தங்களுடனான ஐக்கியம், தானம், ஹோமம்,
தவம், யோகம் முதலியவற்றால் அடைய முடியாதது. புண்ணியசாலிகளான கோபிகைகள் உம்முடன் ஐக்கியத்தை அடைந்தார்கள். பலர் தங்களிடம் பக்தியுடன் இருந்தும், கோபிகைகளின் பக்தியையே மிகவும் விரும்புகின்றீர். ஆகையால், உம்மிடம் உள்ள எனது பக்தியானது உறுதியாக இருக்க அருள வேண்டும். கிருஷ்ணா! என் நோய்களைப் போக்க வேண்டும்.

No comments:

Post a Comment