Friday, April 29, 2016

சென்னை வேளச்சேரி ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி கோயில் / CHENNAI VELACHERY SRI YOGA NARASIMHASWAMY TEMPLE/ கண்ணுக்கினியன கண்டோம்-8

சென்னை வேளச்சேரி ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி கோயில்,CHENNAI VELACHERY SRI YOGA NARASIMHASWAMY TEMPLE

சென்னை வேளச்சேரி ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி கோயில்,CHENNAI VELACHERY SRI YOGA NARASIMHASWAMY TEMPLE

As some of my readers requested to write in english, I have written both in tamil and in english.

ஊர் : வேளச்சேரி, சென்னை
மூலவர்: ஸ்ரீ யோக நரஸிம்ம ஸ்வாமி
உற்சவர்: ஸ்ரீ பக்தவத்ஸலர்(ஸ்ரீதேவி, பூதேவி உபய நாச்சியார்கள்)
தாயார்: ஸ்ரீ அமிர்தபலவல்லித்தாயார்(தனிக்கோயில் நாச்சியார்)
தனிச் சன்னதிகள்: ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ ஆஞ்சனேயர்
ஸ்தலப்பெயர்: வேதஸ்ரேணி(வேளச்சேரி)
ஸ்தலப் பெருமாள் : வேதநாராயணர்
ப்ரத்யக்ஷம்: ப்ரஹ்லாதன்
விமானம்: வேதபுரி விமானம்
ஆகமம்: ஸ்ரீ பாஞ்சராத்ரம்
ஸம்ப்ரதாயம்: தென்னாச்சார்ய ஸம்ப்ரதாயம்
திருவாராதனம்: பாத்ம ஸம்ஹிதை முறைப்படி
பழமை: 1000 வருடம்

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 முதல் பகல்10.30 மணி வரை
மாலை 5.00மணி முதல் இரவு 8.30 மணி வரை
(விசேஷ காலங்களில் கோயில் திறந்திருக்கும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)

திருவாராதனம்: காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை

உற்சவங்கள்/ திருவிழா:

ஒவ்வொரு மாதமும் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம். சித்திரை ஸ்வாதி ப்ரம்மோத்ஸவம், வைகாசி ஸ்வாதி வசந்தோத்ஸவம், ஆனி ஸ்வாதி ஜேஷ்டாபிஷேகம், ஆடி ஆண்டாள் திருக்கல்யாணம், புரட்டாசி அன்னக்கூடை, கார்த்திகை பவித்ரோத்ஸவம், மார்கழி மாத தினசரி பூஜைகள், தை கனு உத்ஸவம், பங்குனி தாயார் ப்ரம்மோத்ஸவம் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் முதலியவை.

ஸ்தலப்பெருமை:

சதுர்வேதிமங்கலம் /வேதநாராயணபுரம், அதாவது நான்கு வேதங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்ட இடம். வேள்விகள் நிறைய நடந்ததால் வேதஸ்ரேணி,வேள்விச்சேரி என்ற பெயர் கொண்ட இந்த இடம், பிற்காலத்தில் வேளச்சேரி என மறுவியதாம். மூலஸ்தானத்தில் பெருமாள் ஸ்ரீ யோக நரஸிம்ஹர், நான்கு திருக்கரங்களுடன், வீற்றிருந்த யோக திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கின்றார். மேற்கே திருமுக மண்டலம். மிக அரிய இந்தத் திருக்கோலத்தில் உள்ள பெருமாள் வரப்ரஸாதி. பெரிய திருவுருவம். பெரியவாய நேத்ரங்கள். பெருமாளின் திருமுக மண்டலத்தைப் பார்க்கும்போது நேத்ரங்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறது. சாந்த ஸ்வரூபியாக பரிவுடன் நம்மைப் பார்த்து அருள் பாலிக்கின்றார். ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?’ என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. அரங்கனின் கண்ணழகில் மயங்கிய உறங்காவில்லிதாசரைப் போல நாமும் “கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம்” என்று காணுதற்கரிய அழகைக் கண்டு மயங்கி நிற்கிறோம்.

ஸ்தலப் பெருமாள் வேதநாராயணர், வலது கையில் பிரயோக சக்ரத்துடன் காட்சியளிக்கிறார். உற்சவர் பக்தவத்சலப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ ப்ரஹ்லாதன், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோரையும் ஸேவிக்கலாம்.

ஸ்ரீ அமிர்தபலவல்லித்தாயார் தனிக்கோயில் நாச்சியாராக ஸேவை சாதிக்கின்றார். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு விசேஷ பூஜைகள்.

ஸ்ரீராமருக்கு தனி சன்னதி. உற்சவர் ஸ்ரீராமருடைய வில்லில் பூ முடிந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்று சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயருக்கும் தனி சந்நிதி உள்ளது.

பிராகாரத்தில், அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து இருக்கின்றது. அதனடியில் நாகர் இருக்கிறார்.

வேளச்சேரி விஜயநகரம் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் இருந்து 1 km. தொலைவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

A small gist about the temple:

Velachery Yoga Narasimha Swamy Temple

Shri Yoga Narasimha Swamy Temple is said to be 1000 years old. In olden days, vedas were taught in this place, yagnas were conducted regularly and hence it was called as chathurvedhimangalam/Vedhanarayanapuram and Velvichery, which later became Velachery.

In the sanctum santorum, The Moolavar Sree Yoga Narasimhar with four hands, is in a sitting posture facing west, which is considered rare. The utsavar is Bhakathavatsala perumal with Sridevi & Bhoodevi as consorts. Prahlada is also there. Veda Narayana Perumal is said to be the sthalaperumal and is seen with 'Prayoga Chakra'in his hand.

Thayaar 'Amirthabalavalli' is in a separate sannadhi in the prakaram. There are separate sannadhis for Sri Kothandaramar and Anjaneyar. To those facing delay in marriages, worshipping the utsavar rama idol by tying flower in his bow is said to ensure speedy and successful marriage. Naagar is under the peepal and neem tree.

Tirumanjanam for Moolavar on all swathi nakshathram days. Utsavams like Brahmotsavam, Jyeshtabhishekam, Vasanthotsavam, Panguni uthiram thirukkalyanam, are conducted yearly once.

The temple is situated at 1 km. from Vijayanagaram bus stop and Velachery railway station. The temple is managed by Hindu endowment religious board. The deities are The renovation is under way and the management has proposed to perform the samprokshanam in July 2016.

No comments:

Post a Comment